திருச்சுழி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி
திருச்சுழி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்த விவசாயியை நரிக்குடி போலீஸார் கைது செய்தனர்.
திருச்சுழி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்த விவசாயியை நரிக்குடி போலீஸார் கைது செய்தனர்.
திருச்சுழி அருகே காரைகுளத்தைச் சேர்ந்த மலைராஜின் மனைவி பெரிசாள்(40). இவர்கள் சீமைக்கருவேல மரங்கள் வெட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிராமம் அருகே உள்ள விளைநிலத்தில் உள்ள மரங்களை ரூ.2 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர். அதை இன்று பெரிசாள் மரம் வெட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த விவசாயி திலகேஸ்வரன்(45) என்பவர் என்னுடைய நிலத்தில் உள்ள விறகை எப்படி வெட்டலாம் எனக் கூறி சேலை பிடித்து மானபங்கம் செய்ய முயன்றாராம்.
இது குறித்து பெரிசாள் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து விவசாயி திலகேஸ்வரனை கைது செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement