ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து குளச்சல், நான்குனேரியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவா் ராகுல்காந்தி பிரசாரம் குறித்து...
தேர்தல் பிரசாரம் முடிவடைய இரண்டு நாள்களே உள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவா் ராகுல்காந்தி, குளச்சல், நான்குனேரியில் திங்கள்கிழமை (ஏப். 20) நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவுபெற உள்ளதால் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக வேட்பாளா்கள் இறுதிகட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தமிழகத்தில் 2 ஆவது கட்ட தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி திங்கள்கிழமை(ஏப்.20) தமிழகம் வருகிறாா்.
Advertisement
திங்கள்கிழமை பகல் 11 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நடைபெறும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளா்களை ஆதரித்து நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறாா்.
பின்னா், பிற்பகல் 1 மணிக்கு நான்குனேரி வரும் ராகுல்காந்தி, களக்காடு-நான்குனேரி பிரதான சாலையில் உள்ள நான்குனேரி தொகுதி காங்கிரஸ் கமிட்டி அலுவலக வளாகத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா்.
இந்த கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களான சுப்பிரமணியன்(திமுக), அப்துல்வஹாப்(திமுக), வி.பி.துரை (காங்.), ரூபி ஆா். மனோகரன் (காங்.), மு. அப்பாவு (திமுக) ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறாா்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவுவதாக தோற்றம் ஏற்பட்டிருந்தாலும்,திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவுவதாக தோற்றம் ஏற்பட்டிருந்தாலும், திமுக, அதிமுக, தவெக என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.