முகப்பு
தமிழ்நாடு

7-ம் வகுப்பு படிக்கும் மலைவாழ் இன சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் இன 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு

7-ம் வகுப்பு படிக்கும் மலைவாழ் இன சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் இன 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:59 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் இன 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள செண்பகத்தோப்பு, பளியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன். இவரது 13 வயது மகள் மம்சாபுரம், பசும்பொன் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதே இடத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்தேவர் மகன் சபரிமலை (23). இவர் செவ்வாய்கிழமை சிறுமியை, மலைக்குள் கடத்திச் சென்று அங்கு வைத்திருந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் சோலையம்மாள் புகார் செய்தார். போலீஸார் சபரிமலை மீது கடத்தல், கற்பழித்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சபரிமலையை சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிபதி பசும்பொன் சண்முகையை, சபரிமலையை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →