கல்லூரி மாணவியைக் காணவில்லை என புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
தமிழ்நாடுகல்லூரி மாணவியைக் காணவில்லை என புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வ.புதுப்பட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ப.முத்துச்சாமி (44). இவரது மகள் அப்பீஸ்வரி (19). இவர் விருதுநகரில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். செவ்வாய்கிழமை விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பீஸ்வரி, தனது ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முனியாண்டி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இதனைப் பெற்றோர் கண்டித்துள்ளார்கள்.
சனிக்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அப்பீஸ்வரி வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டாராம். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பீஸ்வரியைத் தேடி வருகிறார்கள்.