முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் போனஸ் கேட்டு மறியல்: மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 162 பேர் கைது

விருதுநகரில் போனஸ் கேட்டு மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு

விருதுநகரில் போனஸ் கேட்டு மறியல்: மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 162 பேர் கைது

விருதுநகரில் போனஸ் கேட்டு மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

விருதுநகரில் போனஸ் கேட்டு மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலர் சந்திரன், செயல் தலைவர் தங்கராஜ், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின்வாரிய அனல், புனல், பொது கட்டுமான வட்டம், விநியோக வட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். நிரந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதைப்போல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ், கருணைத் தொகை 30 சதவிகிதமும் வழங்க வேண்டுமென வலியுறத்தி கோஷமிட்டனர்.

இதில், மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 162 பேரை விருதுநகர் கிழக்கு போலீசார் கைதுசெய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →