முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி பெண் டாக்டர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி பெண் டாக்டரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி பெண் டாக்டர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி பெண் டாக்டரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி பெண் டாக்டரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

விருதுநகர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் டாக்டர் முத்து வீரலட்சுமிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் மேல்பக்கம் வடக்குத் தெருவில் மகாலிங்கம் மனைவி சுகுனா (32) என்பவர், மருத்துவப் பட்டம் பெறாமல் போலியாக மருத்துவம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

இதன் பேரில் முத்து வீரலட்சுமி தனது மருத்துவக் குழுவினருடன் குறிப்பிட்ட வீட்டை திடீர் ஆய்வு செய்தார். அப்போது சுகுனா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்துள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் டாக்டர் முத்து வீரலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுகுனாவைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →