முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 13-ம் தேதி நடைபெற இருப்பதாக தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 10 செப்டம்பர், 2015 at 7:29 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:10 PM

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 13-ம் தேதி நடைபெற இருப்பதாக தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது.

Advertisement

இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணம், தேர்தல் நிதி வசூல் செய்தல் மற்றும் செப்.15-ம் தேதி முதல், தொடர்ந்து அக்.14ம் தேதி வரையில் வாக்காளர் நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

அதனால், இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், நகர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணியினரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.