விருதுநகர் அருகே மனைவி மாயம் போலீஸில் கணவன் புகார்
விருதுநகர் அருகே மனைவி மாயமானது சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸாரிடம் கணவன் புகார் செய்தார்.
விருதுநகர் அருகே மனைவி மாயமானது சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸாரிடம் கணவன் புகார் செய்தார்.
விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் ரமேஷ்(24). இதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி(19) காதலித்து வந்தாராம். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதை மீறி கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு, ரமேஷ் வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று ரமேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்க்கையில் வீட்டில் இருந்த தனலட்சுமியை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்து உள்ளார். அதில், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லையாம்.
Advertisement
எனவே இது தொடர்பாக ரமேஷ் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனலட்சுமி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.