முகப்பு
தமிழ்நாடு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வருகிற 18ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முாகம் நடைபெற இருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 செப்டம்பர், 2015 at 9:52 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:13 PM

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வருகிற 18ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முாகம் நடைபெற இருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

உலகின் பலநாடுகளில் கிளைகள் உள்ள பிரசித்தி பெற்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கார்பெண்டர், மேன்சன், கம்பி கட்டுநர் ஆகிய வேலைகளுக்கு ஆள்கள் தேவைப்படுகிறது. இதற்கு 5 -ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 3 மாத பயிற்சிக்கு பின் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்குமிடம் விலையில்லாமல் அளிக்கப்படும். இப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ள ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர். மேலும், ஐ.டி.ஐ எலெக்ட்ரீசியன், பிளம்பிங், வெல்டிங் படித்தவர்களுக்கு 3 மாதம் துறைச்சார்ந்த பயிற்சி அளிக்கப்படும்.

Advertisement

எனவே இப்பணியில் சேர ஆர்வமுள்ளோர் தங்கள் கல்வி தகுதிக்கான சான்று, ஆதார் அட்டை, ரேசன்கார்டு நகல் மற்றும் புகைப்படம் ஆகியவைகளுடன் வருகிற 18ம் தேதி விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.