முகப்பு
தமிழ்நாடு

கேரளா பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

கேரளா மாநிலத்தில் உள்ளி பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கையெழுத்திட்டுள்ளது.

தமிழ்நாடு

கேரளா பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

கேரளா மாநிலத்தில் உள்ளி பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கையெழுத்திட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:47 AM
பகிர்:

கேரளா மாநிலத்தில் உள்ளி பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கையெழுத்திட்டுள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 200 பள்ளி, கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி இப் பள்ளி கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு வந்து ஆய்வுக் கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இங்குள்ள பேராசிரியர்கள் அப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு கடினமான பாடப் பகுதிகளை விளக்கி வருவார்கள்.

தற்போது கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி இத் திட்டத்தில் இணைந்துள்ளது. பள்ளியின் நிர்வாகி அருட்தந்தை ஜாருவில் மற்றும் பல்கலைக்கழக கேரளா பள்ளி ஒருங்கிணைப்பு அதிகாரி பேராசிரியர் சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அப்போது உடன் பள்ளி ஆசிரியர் ஜோசிபென் உடனிருந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை டீன் வெண்குமார் செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →