விருதுநகரில் தனிநபர் கழிப்பறை வளாகம் அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு
விருதுநகரில் தனிநபர் கழிப்பறை வளாகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
விருதுநகரில் தனிநபர் கழிப்பறை வளாகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வளாக கூட்டரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆணையாளர் தனசேகர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மல்லிகா மற்றும் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஒன்றியக் குழுதலைவர் கி.கலாநிதி கலந்து கொண்டு பேசுகையில், ஒவ்வொரு ஊராட்சிகளையும் சுகாதார கிராமங்களாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் தனிநபர் கழிப்பறை வளாகம் அமைக்க தலா ரூ.12500 முழு மானியமும் அளிக்கப்படுகிறது.
Advertisement
இது குறித்து பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கள் கிராமங்களில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தொகையை அனைவரும் பெற்று தனிநபர் கழிப்பறைகள் அமைத்து, கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் செய்திருந்தனர்.