சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி திங்கள்கிழமை ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி திங்கள்கிழமை ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.தியாகராஜன் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மோகனவல்லித்தாயார் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஆர்.சுசிலா மேரி சிறப்புரை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜலாலுதின், மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
Advertisement
இதில், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு உத்தரவுக்கு மாறாக சமையல் உதவியாளர்களிடம் தணிக்கைத் தடை என்ற பெயரில் பணபிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில பொதுச்செயலாளர் இ.மாயமலை நிறைவுரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.