முகப்பு
தமிழ்நாடு

திருச்சி விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

திருச்சி: திருச்சி விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சந்தேகத்தின் பேரில் திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் விமானநிலை வருகை பகுதியில் இருக்கும் கழிவறையில் 2.13 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். சோதனை செய்யும் போது சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து தரையிறங்கிய விமானத்தில் வந்த நபர் ஒருவரே இதை கொண்டுவந்திருக்க முடியும் என்ற கோணத்திலும், கண்காணிப்பு கேமரா மூலமும் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பையில் மொத்தம் 8 கட்டிகள் இருந்ததாகவும், அதன்மதிப்பு ரூ.60 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.