முகப்பு
தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயில் அம்பாள் தேருக்கு கண்ணாடி இழைக் கூண்டு!

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் தேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் கண்ணாடி இழை (பைபர் கிளாஸ்) கூண்டு அமைக்கப்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:42 PM
பகிர்:

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் தேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் கண்ணாடி இழை (பைபர் கிளாஸ்) கூண்டு அமைக்கப்பட்டது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் விமர்சையாக நடைபெறுகிறது.

இந்த 5 தேர்களும் தகரத்தினால் ஆன கூண்டு அமைத்து மூடப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும்போது, தகரக் கொட்டகை அகற்றப்பட்டு பின்னர் மூடப்படுவதுண்டு.
தகரக் கொட்டகையால் தேர்கள் மூடப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தேர்களை கண்டு களிக்க முடியாத நிலை இருந்தது.

பிரசித்திப் பெற்ற கோயில்களிலுள்ள தேர்களை இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கண்ணாடி இழை (பைபர் கிளாஸ்) கூண்டு அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
இதன்படி திருநெல்வேலி நகரிலுள்ள அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் தேரை ரூ. 9 லட்சத்து 98 ஆயிரத்து 475 மதிப்பில் கண்ணாடி இழைக் கூண்டு அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருமங்கலம் வேளாண்மை பொறியியல் கூட்டுறவு மையப் பணியாளர்கள் கண்ணாடி  இழைக் கூண்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேரின் 3 புறங்களில் கண்ணாடி இழையால் ஆனச் சட்டங்களும், பின்புறத்தில் தகர சட்டங்கள் மூலம் முழுவதும் மறைக்கப்படுகிறது.

இதன் மூலம் பக்தர்கள், வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் அம்பாள் தேரை கண்ணாடி இழை கூண்டு வழியாக பார்வையிடலாம். பக்தர்கள் தேரின் உட்பகுதிக்கு சென்று பார்வையிடும் வகையில் 5 அடி உயரத்தில் கதவு அமைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →