தொழில்நுட்பக் கோளாறு: ஜெட்டா புறப்பட்ட சௌதி விமானம் சென்னையில் தரையிறக்கம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சௌதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சௌதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
258 பயணிகளுடன், இன்று முற்பகல் 11.40 மணியளவில் ஜெட்டா நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
12.10 மணியளவில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement