பாம்பன் மேம்பாலத்தில் இருந்து குதித்து கரூரைச் சேர்ந்த பெண் தற்கொலை
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் சாலை மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து 52 வயதான பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் சாலை மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து 52 வயதான பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திங்கட்கிழமை இரவு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரலஷ்மி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலத்தில் இருந்து ஒரு பெண்மணி குதிப்பதைப் பார்த்த மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், இன்று காலை வரலஷ்மியின் உடல் மீட்கப்பட்டது.
Advertisement
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.