நெல்லையில் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.
வழக்குரைஞர்கள் தங்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே புதன்கிழமை வழக்குரைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதானச் சாலையில் சட்டக் கல்லூரி முன்பு அவர்கள் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.