பண்ருட்டி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
பண்ருட்டி அருகே நடந்த சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி: பண்ருட்டி அருகே நடந்த சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிபாலன் (45) விவசாயி. இவரது மனைவி சுமதி திங்கள் இரவு தெற்கு மேல்மாம்பட்டு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் விலாசம் விசாரிப்பது போல் பேசி கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து, சுமதி அளித்த புகாரின் கடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.