நெல்லையில் அரசுப் பேருந்து மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் சாவு
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் தேசிய நெடுஞ்சாலைக் குடியிருப்பு நோபுள் தெருவை சேர்ந்தவர் சந்தானம் மகன் முத்துக்குமார் (61). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.
முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி தெற்குபுறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சிவகிரியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
புறவழிச்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.