மதனைத் தொடர்ந்து தேடுமாறு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
காணாமல் போயியுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் மதனைத் தொடர்ந்து தேடுமாறு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: காணாமல் போயியுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் மதனைத் தொடர்ந்து தேடுமாறு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேந்தர் மூவீஸ் தயாரிப்பாளர் எஸ்.மதன் கடந்த மாத இறுதியிலிருந்து காணாமல் போய்விட்டார். கங்கையில் சமாதி அடையச் செல்வதாக வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பிருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன தனது மகனை கண்டுப்பிடித்து தருமாறு மதனின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்ததது.
Advertisement
மதன் தாயார் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த மே 27 ஆம் தேதி தில்லி சென்ற தனது மகன் திரும்பி வரவேவில்லை. இதுகுறித்து காவல் துறையில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனது மகனை கண்டுப்பிடித்து தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர், மதன் தாயார் அளித்த புகார் குறித்து ஜூன் முதலாம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதுதவிர மதன் மீது பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர் என்றும் கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதேநேரத்தில் மதனை தொடர்ந்து தேடுவதற்கு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.