முகப்பு
தமிழ்நாடு

அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் ஒரே நாளில் அடவிநயினார் அணை நீர்மட்டம் 9 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்துள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:28 PM
பகிர்:

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் ஒரே நாளில் அடவிநயினார் அணை நீர்மட்டம் 9 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-30, பாபநாசம் கீழ் அணை-11, சேர்வலாறு அணை-3, மணிமுத்தாறு அணை-6, கடனாநதி அணை-15, ராமநதி அணை-3, கருப்பாநதி அணை-4, குண்டாறு அணை-42, அடவிநயினார் அணை-20, கொடுமுடியாறு அணை-17, கன்னடியன் அணைக்கட்டு-2, தென்காசி-6, ஆய்க்குடி-6.2, ஆலங்குளம் 1.4.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் சில தினங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் பிரதான அணைகளின் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2126.69 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 664 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 800 கனஅடி, கடனாநதி அணைக்கு 128 கனஅடி, ராமநதி அணைக்கு 25.60 கனஅடி, குண்டாறு அணைக்கு 15 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 97 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 57 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 79 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 104.49 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.95 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 37 அடியாகவும் இருந்தது.

இதேபோல், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 49 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 13 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 24 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.94 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.76 அடியாகவும் இருந்தது.

பாசனத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து 500 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 45 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து சாகுடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →