வீட்டில் தனியாக இருந்த சிறுவனிடம் நூதன முறையில் திருட்டு: 7 பவுன் நகை பறிப்பு
திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவனிடம் நூதன முறையில் மர்ம நபர் 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது குறித்து ஒலக்கூர் போலீஸார் செவ்வாய்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.
திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவனிடம் நூதன முறையில் மர்ம நபர் 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது குறித்து ஒலக்கூர் போலீஸார் செவ்வாய்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.
ஓங்கூரை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்.இவர் பணிக்கு சென்ற நிலையில் அவரது மனைவி காயத்ரி தனது மகள் வினோதினியுடன் திண்டிவனத்திற்கு சென்று இருந்தார்.அப்போது அவரது வீட்டில் அவரது மகன் மோகன்ராஜ் மட்டும் இருந்தார்.
இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் மோகன்ராஜிடம் தனது தந்தை அன்பழகன் வீட்டில் இருக்கும் நகைகளை பெற்றுக்கொண்டு வருமாறு கூறியதாக தெரிவித்தார்.இதனால் மோகன்ராஜ் வீட்டின் பீரோவில் இருந்த 7பவுன் தங்க நகைகளை மர்ம நபரிடம் எடுத்து கொடுத்துள்ளார்.
சற்று நேரத்தில் வீடு திரும்பிய அவரது தாய் காயத்திரி இது குறித்த மோகன்ராஜ் கூறியுள்ளார்.இந்நிலையில் இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.