புதுக்கோட்டை: 1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் ரூ.1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் ரூ.1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வேம்பங்குடி இந்தியன் வங்கியில் போலியான பெயரில் வேளாண் கடன், நகைக்கடன் மூலம் ரூ.1.52 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையின் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.