தமிழ்நாடு

தேமுதிக தனித்துப் போட்டி:தலைவர்கள் வரவேற்பு

பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

தினமணி

பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

வைகோ (மதிமுக): விஜயகாந்தின் முடிவை வரவேற்கிறேன். கூட்டணிக்காக விஜயகாந்த் பேரம் பேசுவதாக அவர் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனை அவர் தகர்த்துள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): திமுக - அதிமுகவைத் எதிர்த்து தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியுள்ள விஜயகாந்தின் முடிவை வரவேற்கிறோம்.

தமிழிசை (பாஜக): பாஜக கூட்டணிக்கு தேமுதிக வராதது வருத்தமளிக்கவே செய்கிறது. திமுகவோடு தேமுதிக கூட்டணியில் சேராதது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. "பழம் நழுவி பாலில் விழுகிறது' என்று கூறியவர்கள் இதற்கு விளக்கம் தர வேண்டும். 234 தொகுதிகளிலும் பாஜகவின் பலத்தை நிரூபிப்போம்.

ஜி.கே.வாசன் (தமாகா): தனது கட்சி, மக்கள் நலன் சார்ந்து விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார். அந்த முடிவு வரவேற்கத்தக்கது.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): தனக்கு எதிரான அவதூறுகளை தவிடு பொடியாக்கியுள்ளார் விஜயகாந்த். அவரது முடிவு வரவேற்கத்தக்கது. இந்த முடிவால் திமுகவும், பாஜகவும் அதிர்ச்சியடையும். இதனால் மக்கள் நலக்கூட்டணிக்குப் பாதிப்பில்லை.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால், மக்கள் நலக் கூட்டணிக்கு பின்னடைவு இல்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்.

சி.ஆர்.சரஸ்வதி (அதிமுக): தேமுதிக முடிவு குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக தேமுதிக இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT