முகப்பு
தமிழ்நாடு

மீன் உணவு சாப்பிட்ட முதியவர் பரிதாப சாவு: மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

பண்ருட்டி அடுத்துள்ள குடிமீயாகுப்பம் காலணியைச் சேர்ந்தவர் பெருமாள் (87). இவர் நேற்று மீன் உணவு சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:39 PM
பகிர்:

நெய்வேலி: பண்ருட்டி அடுத்துள்ள குடிமீயாகுப்பம் காலணியைச் சேர்ந்தவர் பெருமாள் (87). இவர் நேற்று மீன் உணவு சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிமீயாகுப்பம் காலணியில் வசித்து வரும் பெருமாளின் வீட்டில், நேற்று தெருவில் விற்பனை செய்த மீன்களை வாங்கியுள்ளனர். மீனின் வயிற்றில் இருந்த தெனை (மீன் முட்டை) தனியாக எடுத்துச் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனால், பெருமாள் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே, அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு முதியவர் பெருமாள் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா, நாகாம்மள் விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாராயணசாமி, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் புதுச்சேரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →