நெய்வேலியில் பறவைகள் மர்ம முறையில் இறப்பு
நெய்வேலியில் பிரதான சாலையில் காக்கை, மைனாக்கள் உள்ளிட்ட பறவைகள் மர்ம முறையில் இறந்து கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி: நெய்வேலியில் பிரதான சாலையில் காக்கை, மைனாக்கள் உள்ளிட்ட பறவைகள் மர்ம முறையில் இறந்து கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி பிரதான சாலையின் இருபக்கமும் அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில், வழிநெடுங்கிலும் காக்கை மற்றும் மைனா உள்ளிட்ட பறவைகள் இறந்து கிடக்கின்றது. காடுகளினுள் மேலும் பறவைகள் பல இறந்து கிடக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
காடுகளின் அருகே விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சி மருந்து அருந்தியதால் இறந்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. பறவைகள் மர்ம முறையில் இறந்திருப்பது குறித்து அப்பகுதியில் விவசாயிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.