அடிப்படை வசதி கோரி மந்தாரகுப்பம் அருகே உண்ணாவிரத போராட்டம்
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட தாண்டவன்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட....
நெய்வேலி: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட தாண்டவன்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மந்தாரகுப்பம் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உறுப்பினர் முத்துவேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தை சிதம்பரம் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.
தண்டவன்குப்பம் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர கோரியும், சுரங்கப்பகுதியில் வைக்கும் வெடியின் வீரியத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.