சிவகாசியில் பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
சிவகாசியில் வியாழக்கிழமை பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:01 AM
சிவகாசி: சிவகாசியில் வியாழக்கிழமை பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகாசி - விருதுநகர் புறவழிச்சாலையில் ஒரு பட்டாசு கடைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட தீப்பெட்டி மத்தாப்பூ பெட்டிகளில் ஏற்பட்ட தீவிபத்து , பட்டாசு கடைக்கும் பரவியது. இதில் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இந்தப்புகை அருகில் இருந்த தனியார் ஸ்கேன் மையத்திற்குள்ள சென்றதால் அங்கிருந்தவர்களில் 8 பேர் மூச்சுத்தினறி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சிவகாசியில் உள்ள வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement