முகப்பு
தமிழ்நாடு

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி 1950-ஐ தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அதிகாரி வ.மலர்க்கண்ணன் அறிவித்துள்ளார்.

Updated On : 28 அக்டோபர், 2016 at 3:16 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:04 AM


புதுச்சேரி: புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி 1950-ஐ தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அதிகாரி வ.மலர்க்கண்ணன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற மக்களின் துணையோடு தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடைமுறை அமுலில் இருக்கும் போது, பொது இடங்களில் கட்சி சார்ந்த சுவரொட்டிகள், பேனர்கள், கொடிகள் இருக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருள் தந்து வாக்கு சேகரிக்கக்கூடாது.

Advertisement

காலை 6 மணிக்கு முன்போ அல்லது இரவு 10 மணிக்கு பின்போ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.

மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரி (கட்டுப்பாட்டு அறை) கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-லும், தேர்தல் நடத்தும் அதிகாரி-7, (கட்டுப்பாட்டு அறை) தொலைபேசி எண்.0413-2245100 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கும். மேலும் இ-மெயில் as-ro7.pon@nic.in, http://egov-election.pon.nic.in/theervu/ என்ற இணையதளத்திலும் புகார்களை பதிவு செய்யலாம்.
புகார்களை பெற்ற உடனே நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் மலர்க்கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.