முகப்பு
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி பேரணி!

காவிரி நதிநீர் பங்கீட்டில் உரிமை கோரி சென்னையில் நாம்  தமிழர் கட்சியினர் இன்று சீமான் தலைமையில் பேரணி நடத்தினர்

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

காவிரி நதிநீர் பங்கீட்டில் உரிமை கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று சீமான் தலைமையில் பேரணி நடத்தினர்

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா சுணக்கம் காட்டுவதைக் கண்டித்தும், நதிநீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை வலியுறுத்தியும், சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சியினர் இன்று பேரணி நடத்தினார்கள்.

இந்த பேரணிக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை  வகித்தார். பேரணியில் இயக்குனர்கள் அமீர், சேரன் மற்றும் ரவிமரியா ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments