சோத்துப்பாக்கம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் சாவு
மேல்மருவத்தூர் அருகே வந்தவாசி-சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.
சோத்துப்பாக்கம்: மேல்மருவத்தூர் அருகே வந்தவாசி-சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.
வந்தவாசியிலிருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.