தமிழ்நாடு

ஒரே நாளில் 1,65,644 பேர் வேட்புமனு தாக்கல்

DIN

உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட வெள்ளிக்கிழமை மட்டும் 1,65,644 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
12 மாநகராட்சிகளில் உள்ள 919 வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வார்டுகள், ஒன்றியக் குழுக்கள்- நகராட்சிகள்- பேரூராட்சிகளில் உள்ள வார்டுகள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டுகள் என 1,31,794 பதவியிடங்களுக்கு கடந்த 26-ஆம் தேதி தொடங்கி, வேட்பு மனு தாக்கல் அக். 3 வரைநடக்கிறது.
இதில் வெள்ளிக்கிழமை மட்டும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 666 பேரும், ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 7,128 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 31,114 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,12,794 பேரும், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,433 பேரும், நகராட்சி வார்டு பதவிக்கு 3,982 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,527 பேரும் என 1,65,644 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இதுவரையில் 2,31,020 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT