தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தேர்தல்: நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்   

DIN

புதுதில்லி: வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் காரணமாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் இரு பிரிவுகளும் பணப்பபட்டுவாடாவில் ஈடுபடுவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி  வருகின்றன. மேலும் இரு அணிகளிடையே அடிக்கடி தகராறுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாநில தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் , உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT