தமிழ்நாடு

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: புழல் சிறையில் அடைப்பு!

தினமணி

சென்னை: புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பபித்துள்ளது.

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் தான் பிணையில் செல்ல விரும்பவில்லை என்று அவர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT