முன்னாள் விமானப்படை வீரரின் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் திருட்டு
கோவையில் முன்னாள் விமானப்படை வீரரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.80 ஆயி்ரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை: கோவையில் முன்னாள் விமானப்படை வீரரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறி்த்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவை சரவணம்பட்டி இன்கம்டேக்ஸ் காலனியைச் சேர்ந்தவர் குணசேகர் (62), இவர் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வங்கிக்கணக்கில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை ரூ.40 ஆயிரம் விதம் இரு தடவை பணம் எடுக்கப்பட்டதாக செல்லிடப்பேசிக்கு குறுந் தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து குணசேகர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.