சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம் அணியினர் எப்போது பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்களோ அப்போது நாங்களும் தயார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.