தமிழ்நாடு

ஒசூரில் கடும் வெயிலால் கார் தீப்பற்றி எரிந்தது

DIN

ஒசூர்: ஒசூரில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலில் நின்றிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கும்பாரபேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை திடீரென இந்த கார் தீப்பற்றி எரிந்தது.

தகவலின் பேரில், உடன் வந்த தீயணைப்பு வீரர்கள் முருகன், பன்னீர்செல்வம், மகேந்திரன், ராஜா ஆகியோர் தீயை அணைத்து, அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

 இந்த காருக்கு யாராவது தீ வைத்தார்களா? அல்லது கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்ததா? அல்லது மின் கசிவால் தீப்பற்றியதா என்றும், கார் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்தும் ஒசூர் நகர காவல் ஆய்வாளர் ராஜா சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT