சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
உணவு செலுத்துவதற்கான குழாயில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கருணாநிதி இன்று காலை 6.45 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு, தொண்டையில் உணவு செலுத்துவதற்கான குழாய் மாற்றப்படுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 4 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் பூரண குணமடைந்ததை அடுத்து, காலை 10.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக கோபாலபுரம் இல்லத்துக்குத் திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.