தமிழ்நாடு

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

DIN

சென்னை: தமிழகத்தில் பொதுத் துறை கூடுதல் செயலர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், 

பொதுத் துறை கூடுதல் செயலர் அனு ஜார்ஜ் ஐஏஎஸ் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக சர்க்கரை கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் துறை கூடுதல் செயலராக சி. சமயமூர்த்தி ஐஏஎஸ்  பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கனிமவள நிறுவன மேலாண் இயக்குநர்  பொறுப்பிலிருந்து வெங்கடேசன் ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் மகேசன் காசிராஜன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலராக வெங்கடேசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் தறை இயக்குராக பி. சங்கர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி  நிறுவன மேலாண் இயக்குநராக இருந்த குமரகுருபரன் ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, பதிவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT