தமிழ்நாடு

பத்திரப் பதிவு தலைவராக குமரகுருபரன் நியமனம்

DIN

பத்திரப் பதிவுத் தலைவராக (ஐ.ஜி.,) குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பதவி பி.சங்கரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்) பி.சங்கர் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை இணைச் செயலாளர் (நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர்) ஜெ.குமரகுருபரன் பத்திரப்பதிவுத் துறை தலைவர் (செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை இணைச் செயலாளர், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்) அனு ஜார்ஜ் சர்க்கரைத் துறை இயக்குநர் (பொதுத்துறை கூடுதல் செயலாளர்-மரபு) சி.சமயமூர்த்தி பொதுத்துறை கூடுதல் செயலாளர்-மரபுகள் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இயக்குநர்) தமிழ்நாடு கனிமவளங்கள் துறை நிர்வாக இயக்குநராக உள்ள ஆர்.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்தார். இந்த கூடுதல் பொறுப்புக்குப் பதிலாக அவர் முழு நேரச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT