சென்னை: மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தினால் படகுகளுக்காக வழங்கப்படும் மானியம் ரத்தாகும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி வந்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சொந்தமான 22 இயந்திரப் படகுகளுக்கு எதிரான நடவடிக்கையை மீன் வளத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
மேலும் மீனவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதி மற்றும் டீசல் மானியம் ஆகியவற்றை நிறுத்திவைக்கப்படுகிறது.
இதனுடன் ஒவ்வொரு படகுக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.