தமிழ்நாடு

பதவிக்காக விதை நெல்லையே விற்கத் துணிந்துவிட்டனர்: நாஞ்சில் சம்பத் பேட்டி

DIN

சென்னை: அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்ட ஓபிஎஸ் உடன் இணைப்பு ஏன்? என்று முல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நேற்று மாலை இரண்டு அணிகள் இணைவதாக ஒரு கேலிக்கூத்தை நடத்தினார்கள், இவர்களால் கேலிக்கூத்து தான் நடத்த முடியும். அது ஒரு நாள் நிகழ்ச்சி தான். அதனால் அதிமுகவில் எந்த மாற்றமும் செய்துவிட முடியாது என்றார்.

ஆட்சியும், அதிகாரதிற்காக விதை நெல்லையே விற்கத் துணிந்துவிட்டனர். பால் வளர்த்த முளையை கிள்ளி பல்லாங்குழி ஆடத் துணிந்துவிட்டார்கள் என்றவர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்ட ஓபிஎஸ் உடன் இணைப்பு ஏன்? என்று பழனிச்சாமிக்கு நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.

ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று எப்போதும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சொன்னது கிடையாது. கட்சியும் ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எந்தத் தவறும் செய்யவில்லை.

தினகரனை விலக்கி வைப்பதாக தீர்மானம் போட்டு கட்சியில் இருந்து விலக்குகிறார்கள், எந்த நிபந்தனைகளும் எங்களைக் கட்டுப்படுத்தாது. டிடிவி தினகரனுக்கு தொண்டர்களின் ஆதரவு உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT