தமிழ்நாடு

எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம், இது தான் சொகுசு வாழ்க்கையா? நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை

தினமணி

எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம், இது தான் சொகுசு வாழ்க்கையா? என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுவையில் தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர் இன்று கூறியதாவது:
நான்கு நாட்கள் இங்கு தங்குவதற்காக வந்துள்ளோம். இதில் இரண்டு நாட்கள் முடிந்துள்ளது. எங்கள் அணிக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. இதனால் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை உயரும். இது பற்றி முழுமையாக தெரிவிக்க முடியாது.

வெளியில் சென்ற பிறகு ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி முடிவு செய்வோம். எங்களது துணை பொதுசெயலாளர் அறிவுரைப்படி கருத்து பரிமாற்றம் செய்து வருகிறோம். இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். நாங்கள் உல்லாசமாக தங்கியிருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

ஆனால் உண்மையில் எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம். இது தான் சொகுசு வாழ்க்கையா? தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. அங்கிருந்தால் மிரட்டப்படுவோம். பாதுகாப்பு கருதியே இங்கு தங்கியுள்ளோம். எங்களது சொந்த பணத்திலே இங்கு தங்கியுள்ளோம் என்றார் தங்கதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT