தமிழ்நாடு

பேரவையில் திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தாலும் தமிழக அரசு வெற்றி பெறும்

DIN

சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திமுக கொண்டு வந்தாலும் தமிழக அரசு வெற்றி பெறும் என்றார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார்.

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பாக்கியராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து கடந்த தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களின் பிரச்னைகளை ஆராய்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தில் மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு நிலைத்திருக்க ஆட்சி நிலையாக இருக்க வேண்டும். எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் இருந்தால்தான் 5 ஆண்டு காலம் ஆட்சியை நடத்த முடியும். திமுக மக்களை நேரிடையாக சந்திக்க இயலாமல் இதுபோன்ற பிரச்னைகள் மூலம் ஆட்சிக்கு வர நினைக்கிறது.
அதிமுகவினர் அனைவரும் அவர்களுக்குள் விட்டுக்கொடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும், அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. டிடிவி தினகரன் என்ற தனிநபரை நான் ஆதரிக்கவில்லை. அதிமுகவில் உள்ள அனைவரும் எங்களுக்கு நண்பர்கள்; அதிமுகவுக்கு எப்போதும் ஆதரவு தருவேன். மக்கள் பிரச்னைகளுக்காக மட்டும் தான் முதல்வரை சந்தித்து வருகிறேன். நீட் தேர்வு, நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருப்பது போன்ற செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT