தமிழ்நாடு

திமுக பெறும் வெற்றி ஸ்டாலினை முதல்வராக்க அடித்தளமாக அமையும்: வைகோ

DIN

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக பெறும் வெற்றி, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக அடித்தளமாக அமையும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். 
கொருக்குப்பேட்டையில் வேனில் பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ நேதாஜி நகர், வ.உ.சி.நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட 13 இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு இறுதியாக காசிமேட்டில் பிரசாரத்தை முடித்தார். அப்போது வைகோ பேசியது:-
தமிழனின் சுயமரியாதைக்கு தற்போது பங்கம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எதையும் எதிர்க்கத் துணிவின்றி மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு இருந்து வருகிறது. பண மதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, நியாய விலைக் கடைகளில் விற்கப்படும் பொருள்களுக்கான சலுகை விலக்கு, மின் விநியோகத் திட்டங்கள், மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சொல்படியே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது. 
ஆட்சி நிர்வாகத்தில் தலையிடும் விதமாக மாநில ஆளுநர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். 
இங்கு ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது ஆளுநர் ஆட்சிக்கு ஒத்திகை நடத்தப்படுகிறதா? எனத் தெரியவில்லை. இதுபோன்ற செயல்கள் மாநில சுயாட்சிக் கொள்கையை ஊட்டி வளர்த்த தமிழகத்திற்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய 
அவமானம். 
இதைத் தட்டிக் கேட்க வேண்டிய முதல்வர், அமைச்சர்கள் ஆளுநரின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பெறும் வெற்றி, தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு அடித்தளமாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT