ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று புதன்கிழமை திரும்பிய ஒரு மீனவருக்கு 27கிலோ எடை கொண்ட பாறைமீன் கிடைத்தது.
பாம்பனிலிலிருந்து செவ்வாய்க்கிழமை 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்த இவர்களுக்கு சீலா, மாவுலா, திருக்கை மற்றும் ஊளி மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. ஒரு மீனவருக்கு 27 கிலோ எடையுள்ள பாறை மீன் ஒன்றும் கிடைத்தது. ஊளி மீன்கள் மட்டும் 1750 கிலோ வரை கிடைத்தன. அவை கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதன் காரணமாக மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.