தமிழ்நாடு

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 27 கிலோ பாறை மீன்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று புதன்கிழமை திரும்பிய ஒரு மீனவருக்கு 27கிலோ எடை கொண்ட பாறைமீன் கிடைத்தது.
பாம்பனிலிலிருந்து செவ்வாய்க்கிழமை 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்த இவர்களுக்கு சீலா, மாவுலா, திருக்கை மற்றும் ஊளி மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. ஒரு மீனவருக்கு 27 கிலோ எடையுள்ள பாறை மீன் ஒன்றும் கிடைத்தது. ஊளி மீன்கள் மட்டும் 1750 கிலோ வரை கிடைத்தன. அவை கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதன் காரணமாக மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT