தமிழ்நாடு

எழுத்தாளர் க.சீ. சிவகுமார் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்

DIN


பிரபல எழுத்தாளர் க.சீ. சிவகுமார் நேற்று மாலை, பெங்களூருவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

திருப்பூர், சின்ன தாராபுரம் அருகே கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த க.சி. சிவகுமார், பத்திரிகைகளில் பணியாற்றியவர். ஏராளமான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ள க.சீ சிவகுமார், கன்னிவாடி ஆதிமங்கலத்து விசேஷங்கள், குணச்சித்தர்கள், உப்புக் கடலை குடிக்கும் பூனை உள்ளிட்ட குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.

150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவர் சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருதையும் பெற்றவர்.

பெங்களூருவில் தான் வசித்து வந்த குடியிருப்பு தளத்தில் 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அவர் மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT