தமிழ்நாடு

முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

DIN

சென்னையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தன்னை முதல்வர் பதவியில் இருந்து நிர்பந்தப்படுத்தி விலகச் செய்ததாக சசிகலா தரப்பினர் மீது பன்னீர்செல்வம் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். மக்களும், அதிமுக தொண்டர்களும் கேட்டுக் கொண்டால், ராஜிநாமாவை திரும்பப் பெற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அவரது புகாருக்கு சசிகலாவும், அமைச்சர்களும் பதிலளித்து விமர்சனம் செய்தனர்.
உடனடியாக, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை பொருளாளர் பதவியில் 10 ஆண்டுகளுக்கு முன் நியமித்தார். எனவே, என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டு முன்பு அதிக அளவில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT