தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ். வெற்றி பெறுவார்

DIN

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கூறினார்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை மாலை சந்தித்தார். அப்போது மைத்ரேயன் எம்.பி. உடன் சென்றிருந்தார்.
ஆளுநருடனான சந்திப்பு குறித்து அவர் கூறியது:
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் வெற்றி பெறுவார். மனசாட்சி உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தையே ஆதரிப்பர். அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதால்தான் எம்எல்ஏக்களை அவர்கள் சிறை பிடித்து வைத்துள்ளனர்.
ஆளுநரைச் சந்தித்தபோது தமிழக நிலவரம் குறித்த விவரங்களை பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார். எம்எல்ஏக்கள் சிறை பிடிக்கப்பட்ட விவரத்தையும் அவர் தெரிவித்தார். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன், தான் சிறைபட்டு தப்பி வந்த விவரத்தை மனுவாக ஆளுநரிடம் கொடுத்தார்.
பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடைபெறுமா என்பது குறித்தெல்லாம் ஆளுநர்தான் முடிவு செய்வார். ஆனால், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT