தமிழ்நாடு

சீன -இந்திய ஆராய்ச்சித் திட்ட தலைவராக சென்னை ஐஐடி பேராசிரியர் தேர்வு

DIN

2017 -19 -ஆம் ஆண்டுக்கான சீன -இந்திய ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக, சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் கரக்கட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 28.12 லட்சம் மதிப்பிலான இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய -சீன கல்வி நிறுவனம், உலக அளவில் 8 நபர்களில் ஒருவராக இவரைத் தேர்வு செய்துள்ளது.
இதன் மூலம் ரூ.3.34 லட்சம் ரொக்கப் பரிசை ஜோ தாமஸ் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி, ஏற்றத் தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்வதே இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
உலக அளவில் நடத்தப்பட்ட தேர்வில் 8 ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக சென்னை ஐஐடி சமூக அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதன் மூலம் கள ஆய்விலும், நியூயார்க்கில் சிறிது காலம் தங்கியிருந்தும் இவர் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT